BuBli Thuppati (பப்ளி துப்பட்டி) Thiruvallur Sri Vaidhya Veeraraghava Perumal Sevas - Yeah its True

Friday, September 6, 2019

BuBli Thuppati (பப்ளி துப்பட்டி) Thiruvallur Sri Vaidhya Veeraraghava Perumal Sevas

அருள்மிகு ஸ்ரீ வீர ராகவ சுவாமி திருக்கோயில் திருவள்ளூர் 

1.மூலவர் எவ்வுள்கிடந்தான் 
2.பெருமாள் வீரராகவர் 
3.தாயார்.கனகவல்லி 
4.தீர்த்தம் ஹிருதாபதணி 
5.விமானம் விஜய கோடி 
6.வனம் வீஷாரண்யம் 
7.பெருமை திவ்யதேசம் 
8.ஊர் திருவள்ளூர் 
9.புராணபெயர்.எவ்வுளூர் 
10.மாவட்டம் பிரார்த்தனை வைத்திய வீரராகவர் பிணி தீர்க்கும் வீரராகவர்

3 அம்மாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும்.குறிப்பாக வயிற்று வலி கைகால் வியாதி.காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது.நேர்த்தி கடன் பப்ளி துப்பட்டி.மேல் வஸ்திரம் அங்கி வாங்கி பெருமாளுக்கு செலுத்தலாம்.இந்த அங்கி வௌதயில் எங்கும் கிடைக்காது.திருக்கோயில் அலுவலகத்தில் இந்த அங்கி கிடைக்கும்.இதன் விலை ரூ.750 (September 2019). உருவத்தகடுகளை.வௌ஢ளி தங்கம் செய்து போடுதல்.தவிர பெருமாளுக்கு அபிசேகம் ஆராதனை செய்தல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம்.தாயாருக்கு 9 கஜ பட்டுப் புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது.உடம்பில் உள்ள மரு கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால் வௌ஢ளம் ஆகியவற்றை பக்தரகள் கரைக்கிறார்கள்.கோயில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்பிக்கின்றனர்.கோயிலின் சிறப்பம்சம் பப்ளி துப்பட்டி.மேல் வஸ்திரம் அங்கி வாங்கி பெருமாளுக்கு செலுத்தலாம்.இந்த அங்கி வௌதயில் எங்கும் கிடைக்காது.திருக்கோயில் அலுவலகத்தில் இந்த அங்கி கிடைக்கும்.இதன் விலை ரூ.300.தலபெருமைகள் தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம் இத்தலத்து குளம் தீர்த்தம் கங்கையை விட புனிதமானது ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம் மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது.மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிசேகம் சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார்.லட்சுமி நரசிம்மர் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் இத்தலத்தில் மிகவும் விசேசம் மிகவும் பழமையான தலம் இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் சென்னையிலிருந்து 50 கி.மீ.காஞ்சிபுரத்திலிருந்து 50 கி.மீதாம்பரத்திலிருந்து 40 கி.மீ.தங்கும் வசதி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் திருவள்ளூரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.கட்டணம் ரூ.200 முதல் 300 வரைபோக்குவரத்து வசதி பஸ்வசதி கோயில் திருவள்ளூர் நகரின் மத்தியில் இருக்கிறது.திருவள்ளூர் சென்னைக்கு அருகில் இருப்பதால் சென்னையிலிருந்து எளிதில் பேருந்து மூலம் திருவள்ளூர் சென்றடையலாம்.சென்னை தவிர தாம்பரம் திருவள்ளூர் காஞ்சிபுரம் நகரங்களிலிருந்தும் திருவள்ளூருக்கு பஸ் வசதி நிறைய உண்டு.அருகில் உள்ள ரயில் நிலையம் திருவள்ளூர் சென்னை.அருகில் உள்ள விமான நிலையம் சென்னை முக்கிய திருவிழாக்கள் பிரம்மோற்சவம் தைமாதம் 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள் பிரம்மோற்சவம் சித்திரைமாதம் 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர்.பவித்ர உற்சவம் 7 நாட்கள் திருவிழா இத்திருவிழாவிலும் பெருமளவில் பக்தர்கள் கூடுவர் இவை தவிர தை அம்மாவாசை வைகுண்ட ஏகாதேசி தமிழ்.பாடல் பாடியோர் இத்தலத்தை திருமழிசைபிரான் திருமங்கைஆழ்வார் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.தல வரலாறு சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் 1 வருடம் தவம் இருந்தார்.வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார்.கிழவரும் புசித்து பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார்.முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் 1 வருடம் கழித்து திரும்பவும் தபம் செய்தார்.மறுகணமே அந்த பிராமணர் ரூபத்தில் வந்த பகவான் சயன கோலத்தில் காட்சி தந்தார்.

No comments:

Post a Comment